கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரீஸ் யாழ் ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரீன் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்கையை யாழ் ஆயர் இல்லத்தில் சந்தித்தார்
கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரீஸ் அவர்கள் இன்று 06 பெப்பிரவரி 2021 மாலை யாழ் ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரீன் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்கையை யாழ் ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார் என ஆயர் இல்ல வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேற்படி சந்திப்பில் பேசப்பட்ட பல விடயங்களில் மத்தியில் முக்கிய விடயங்களான இன்றைய கல்வி நிலை – இனப்பிரச்சினையின் இன்றைய நிலை மற்றும் அதிகாரப்பரவலாக்கம் என்பன பற்றிப் பேசினர்