நாட்டின் சில பகுதிகள் இன்று அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

4cd5feb2c0b9693a5aa62f22212b0919 XL
4cd5feb2c0b9693a5aa62f22212b0919 XL

நாட்டின் சில பகுதிகள் இன்று அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய பொரளை காவல்துறை அதிகார பிரிவுக்குட்பட்ட கோதமிபுர அடுக்குமாடி குடியிருப்பு தொகுதி, கோதமிபுர 24 மற்றும் 78 ஆம் தோட்டங்கள், வேலுவன வீதி என்பன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் பூகொட காவல்துறை அதிகார பிரிவுக்குட்பட்ட குமாரிமுல்ல கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மினுவாங்கொடை காவல்துறை அதிகார பிரிவின் கல்லொலுவ பகுதியின் ஜூம்மா மஸ்ஜிட் மாவத்தை, இத்ரா மாவத்தை, புதிய வீதி மற்றும் அகுரகொட என்பனவும் அம்பலாங்கொடை பிரதேச செயலாளர் பிரிவின் போலான தெற்கு பகுதியும் இன்று அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.