சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தலில் உண்மையில்லை

gota2
gota2

சுவிஸ் துாதரக பெண் பணியாளர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்ற விடயத்தில் உண்மை இல்லை என ஜனாதிபதி ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஆளும் கட்சி தலைவர்களின் கூட்டத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

சிசிடிவி கண்காணிப்பு கமெரா மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயங்கள் தெரியவந்துள்ளதாகவும் நடத்தப்பட்ட விசாரணைகள் அதனை உறுதிசெய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் வாடகை காரின் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், நாட்டிற்கு ஏற்பட்ட அவப்பெயரை நீக்கி உண்மையை வெளிக்கொணர தனது அரசாங்கம் ஒருபோதும் தயங்காது எனவும் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.