தேரர்களை வேட்பாளராக நியமிக்கவேண்டாம்

theros
theros

நாட்டில் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் எந்வொரு பௌத்த தேரரையும் வேட்பாளராக நியமிக்கவேண்டாம் என சிரேஷ்ட பௌத்த தேரர்களினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சிரேஷ்ட பௌத்த தேரர்கள் கட்சிகளின் தலைவர்களிடம் கோரிக்கையை முன்வைக்க உள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை முதலில் சந்தித்து தெளிவுப்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை பௌத்த தேரர்கள் தேர்தல்களில் களமிறங்குவது பௌத்தத்துக்கு பெரும் இழுக்கு எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதன்காரணமாகவே குறித்த கோரிக்கையினை தாம் முன்வைக்கவுள்ளதாகவும் சிரேஷ்ட பௌத்த தேரர்கள் கூறியுள்ளனர்.