பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

big 165616 Coronavirus 1 3
big 165616 Coronavirus 1 3

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (06) மேலும் 740 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 64,141 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 356 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.