இளைஞர் ஒருவர் புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை

Death body 720x450 2
Death body 720x450 2

கொழும்பிலிருந்து பதுளைக்கு பயணித்துக் கொண்டிருந்த இரவு தபால் புகையிரதத்தின் முன் பாய்ந்து இளைஞனொருவன் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் தியத்தலாவையை அண்மித்த புகையிரத பாதையில் இன்று இடம்பெற்றுள்ளது.

வெலிமடையைச் சேர்ந்த 21 வயது நிரம்பிய இளைஞன் ஒருவனே, இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சடலம் தற்போது, தியத்தலாவை அரசினர் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து, தியத்தலாவைப் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.