நாடாளுமன்றத்தில் நாளைய தினம் எழுமாறாக பி.சீ.ஆர். பரிசோதனை

Parliament
Parliament

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நாளைய தினம் எழுமாறாக பி.சீ.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நாளை முற்பகல் 9 மணிமுதல் மதியம் 12 மணிவரை எழுமாறாக பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அதில் பங்கேற்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் படைக்கல சேவிதர் தெரிவித்துள்ளார்.