வவுனியா சிறைச்சாலையில் ஒருவருக்கு கொரோனா!

istockphoto 1208953647 612x612 1
istockphoto 1208953647 612x612 1

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று இன்று (08) உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கொழும்பைச் சேர்ந்த குறித்த நபர் கடந்த 31 ஆம் திகதி வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். அவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்தத நிலையில் இன்று பரிசோதனைக்கான முடிவுகள் கிடைக்கப்பெற்றிருந்தது. அதன்படி அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

இவ்விடயம் தொடர்பான ஏனைய நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.