காதலர் தின நிகழ்வுகளுக்கு தடை – அஜித் ரோஹண

ajith rohana 1 720x450 1
ajith rohana 1 720x450 1

எதிர்வரும் 14ம் திகதி காதலர் தினத்தை முன்னிட்டு பல்வேறு களியாட்ட நிகழ்வுகள் சமூக வலைத்தளங்களினுாடாக ஒழுங்கப்படுத்தப்பட்டு வருவதாக காவல்துறை தொிவித்துள்ளது.

இவ்வாறான கொண்டாட்டங்களுக்காக சிறு குழுக்கள் ஆயத்தப்பட்டு வருகின்றமை தொ்டர்பில் தமக்குத் தகல் கிடைத்திருப்பதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹன தொிவித்துள்ளார்.

சுகாதார அதிகாாிகளின் அனுமதியின்றி சட்ட விரோதமான முறையில் மேற்கொள்ளப்படும் இக்களியாட்ட வைபவங்களில் கலந்து கொள்வோர் மற்றும் ஏற்பாடு செய்வோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தொிவித்தார்.

எனவே இவ்வாறான நிகழ்வுகளில் கலந்து கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு வாலிபர் மற்றும் யுவதிகளிடம் காவல் துறை கேட்டுக்கொள்கிறது