உங்கள் முகம் பட்டுபோல் மின்ன வேண்டுமா? இதை பின்பற்றுங்கள்

gfh 4 600x380 1
gfh 4 600x380 1

முகத்தில் இருக்கும் தோல் பகுதி மிகவும் மென்மையானது. இரண்டிற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். உடலுக்கு பயன்படுத்தும் பொருளை நாம் முகத்திற்கும் சேர்த்து பயன்படுத்தக்கூடாது.

அது கடைகளில் விற்கும் செயற்கை பொருட்களாக இருந்தாலும் சரி, வீட்டில் உபயோகிக்கும் இயற்கை பொருட்களாக இருந்தாலும் சரி. எனவே எந்தெந்த பொருட்கள் நம் முகத்திற்கு உகந்தவை அல்ல என்பதை பார்ப்போம்…

தூங்குவதற்கு முன்

இரவில் தூங்குவதற்கு முன் முகத்தை நன்கு கழுவிட்டு படுக்கச் செல்லவும். இது சருமத்தை பாதிப்பிலிருந்து தடுப்பதுடன், அழுக்கினை அவ்வப்போது அகற்ற உதவுகிறது.

ஆலிவ் எண்ணெய்

தினமும் ஆலிவ் எண்ணெய் பூசுவதன் மூலம் முகம் சுத்தமாக இருக்கும். இதனை காலை, மாலை என இருவேளை பயன்படுத்துவது கூடுதல் பயனை அளிக்கும்.

தண்ணீர்

ஒரு நாளுக்கு எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்கவும். நீர்ச்சத்து மிக்க பழங்களை அன்றாடம் சாப்பிடுவது நல்லது. இதன் மூலம் சருமம் குளிர்ச்சியாக இருப்பதுடன், சருமம் சுருங்காமல் இருக்கும்.

சருமம் பளபளக்க

தினமும் முகத்தை மூன்று முறையாவது வெந்நீரால் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் சருமம் பளபளக்கும். உண்ணும் உணவே உங்கள் அழகைத் தீர்மானிக்கும். எனவே பழங்கள், வைட்டமின் சி, சர்க்கரை அளவு குறைவாகவுள்ள உணவுகள் உண்ண வேண்டும்.

கற்றாழை

கற்றாழை மற்றும் வாழைப்பழம் மாய்ஸ்சரைசிங் தன்மை மற்றும் பளபள வைக்கும் பேஸ் மாஸ்க். இது எல்லா வகையான சருமத்திற்கும் குறிப்பாக, வழக்கமான, எளிதில் பாதிக்கும் சருமத்திற்கு மிகவும் ஏற்றது.

இது சருமத்தை எரிச்சலில் இருந்து விடுவித்து, சருமத்தின் எலாஸ்டிக் தன்மையை மேம்படுத்துகிறது. ஒரு கோப்பையை வாழைப்பழத்தை மேஷ் செய்து, 2 ஸ்பூன் கற்றாழை மற்றும் சில தொட்டு பன்னீர் விடவும். இதை நன்றாக கலந்து, முகத்தில் பூசிக்கொள்ளவும். உலர்ந்த பிறகு கழுவிக்கொள்ளவும்.

எலுமிச்சை

முக அழகிற்கு பயன்படுத்தும் கலவைகளில் எலுமிச்சை நீங்கள் சேர்க்க வேண்டும் என்றால் எலுமிச்சையின் அளவு சரியாக இருக்க வேண்டும். எலுமிச்சையில் இருக்கும் ‘சிட்ரஸ்’ என்கிற மூலக்கூறு எரிச்சலையும், அரிப்பையும் உண்டாகும். எலுமிச்சை சாறை மட்டும் தனியாக முகத்திற்கு பயன்படுத்தக்கூடாது. அவற்றுடன் வேறு சில பொருட்களை கலந்து தான் பயன்படுத்த வேண்டும்.