பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளம் வழங்குவதற்கான சம்பள நிர்ணய சபையின் முடிவை எதிர்க்க உத்தேசித்துள்ளோம் என்று முதலாளிமார் சம்மேளன ஊடகப் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தெரிவித்துள்ளார்.
இரண்டு வாரங்களுக்குள் எழுத்துமூலமாக எமது எதிர்ப்புக்கான நியாயத்தை தொழிலாளர் அமைச்சுக்கு தெரியப்படுத்துவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆயிரம் ரூபா சம்பளம் நிர்ணயத்திற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுமாயின், அதற்கு நாம் கட்டுப்படுவோம். அதற்கமைய நாமும் மாற்று வேலைத்திட்டங்களை கையாள்வோம்.
இப்போது சம்பள நிர்ணய சபையின் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டால் கூட்டு ஒப்பந்தமும் இரத்தாகும். எனவே வேறு மாற்று திட்டங்களில் தோட்டங்களை நாம் நிருவகிக்க வேண்டிவரும் என்றும் குறிப்பிட்டார்.