மடுல்சீமை – சிறிய உலக முடிவை பார்வையிட சென்று காணாமல் போயிருந்த இளைஞரின் சடலம் மீட்பு

Worlds End
Worlds End

மடுல்சீமை – சிறிய உலக முடிவை பார்வையிடச்சென்று காணாமல் போயிருந்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

34 வயதான இளைஞர் உள்ளிட்ட தரப்பினர் அண்மையில் குறித்த பகுதிக்கு சுற்றுலா சென்று முகாமிட்டு தங்கியிருந்த சந்தர்ப்பத்தில் இந்த அனர்த்தம் நேர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் போது அவரது சடலம் இன்று மீட்கப்பட்டதாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.