மனித பாவனைக்கு உதவாத 26,000 கிலோ கிராம் கிழங்கு கண்டுபிடிப்பு!

spuds
spuds

மனித பாவனைக்கு உதவாத 26,000 கிலோ கிராம் கிழங்கு தம்புள்ளை- கண்டலம வீதி பிரதேசத்தில் இருக்கும் கிடங்கு ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த கிழங்கு தொகையைப் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்துள்ளதாக விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.

அத்துடன் குறித்த கிழங்கு தொகையை இறக்குமதி செய்த வர்த்தகரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.