கொரோனா தொற்றால் இறக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று (10) சற்றுமுன் நாடாளுமன்றில் தெரிவித்தார்.
எதிரணி எம்.பி. எஸ்.எம் மரிக்கார் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனை தெரிவித்தார்.
நீர் மூலம் தொற்று பரவாது என இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே அறிவித்துள்ள நிலையிலேயே அனுமதி வழங்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.