ஏறாவூர் பகுதியில் சிறுமி ஒருவரின் முகத்தை தீக்காயங்களுக்குட்படுத்திய நபரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏறாவூர் பகுதியில் கணவன் மற்றும் மனைவிக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தினை தொடர்ந்து தேக்கரண்டி ஒன்றினை சூடேற்றி சிறுமியின் முகத்தில் வைத்துள்ளார்.
தீக்காயங்களுக்கு உள்ளான சிறுமி தற்பொழுது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய நபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மனைவியின் முதலாவது கணவரின் புதல்வியான சிறுமியையே இரண்டாவது கணவர் இவ்வாறு சித்திரவதைக்குட்படுத்தியுள்ளார் என்பது குறிப்பித்தக்கது.