மன்னார் தோட்ட வெளி பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற மண் அகழ்வை நிறுத்தக் கோரி அப்பகுதி பெண்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
குறித்த இடத்தில் மணல் அகழ்விற்கான அனுமதிப்பத்திரம் அனுராதபுரத்திலிருந்து வழங்கப்பட்டுள்ளதாகவும் குறித்த மணல் அகழ்வை நிறுத்தக் கோரி மக்கள் ஆர்ரப்பாட்டங்களை முன்னெடுத்த போதிலும் தொடர்ந்தும் மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அப்பகுதி பெண்கள் அனைவரும் இணைந்து மணல் அகழ்விற்கெதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் குறித்த பகுதிக்கு பங்குத்தந்தை அருட் தந்தை பெனோ அலேக்சான்டர் சில்வா, மன்னார் பிரதேச சபை உறுப்பினர் ஏ.ரி.லுஸ்ரின் ஆகியோர் சென்று மக்களுடன் கலந்துரையாடிய பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.