றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடினின் கொலை வழக்கு தொடர்பான சாட்சிகளை மறைக்க முற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர் அநுர சேனாநாயக்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் 31ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
குறித்த வழக்கு கொழும்பு உயர்நீதிமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.