இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் அஹமட் அல் முஅல்லா மற்றும் நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் ஜோன்னா கேம்பர்ஸ் ஆகியோரிற்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இருநாட்டு தூதுவர்களிற்கும் இலங்கை ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பின் போது எதிர்காலத்தில் மிகுந்த ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கும் இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்தி, பரஸ்பர நன்மைகளை அதிகரிப்பதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,
இருநாட்டு தூதுவர்களிற்கும் ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பு இருவேறு சந்தர்ப்பங்களில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.