மேலும் 850 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

திரும்பினர் 3
திரும்பினர் 3

வெளிநாடுகளில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதிக்குள் 850 பயணிகள் நாடு திரும்பியுள்ளனர்.

அதன்படி 10 விமானங்களினூடாக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயிலிருந்து 108 பேரும் சவுதி அரேபியாவின் ரியாத்திலிருந்து 102 பேரும் வேறு நாடுகளில் இருந்து ஏனையவர்களும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

விமான நிலையத்தை வந்தடைந்த பயணிகள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக இலங்கை இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை இந்த காலகட்டத்தில் 10 விமானங்களினூடாக 843 பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளனர்.

இதன் அடிப்படையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 24 மணிநேரப் பகுதிக்குள் 20 பயணிகள் விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவற்றினூடாக ஆயிரத்து 693 பயணிகள் தமக்கான சேவைகளை பெற்றுக்கொண்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் இந்த காலகட்டத்தில், 50 ஆயிரம் கிலோ கிராம் பொருட்கள் இறக்குமதியாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

அத்துடன், 295,000 கிலோ கிராம் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.