நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 74,056 ஆக அதிகரிப்பு!

202010101937219542 Tamil News Andhra Pradesh 5653 people corona infection in today SECVPF
202010101937219542 Tamil News Andhra Pradesh 5653 people corona infection in today SECVPF

நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 74,000 ஐ கடந்துள்ளது.

நேற்றைய தினம் 940 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதையடுத்து இந்த எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொவிட் 19 தொற்றுறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 74,056 ஆக உயர்வடைந்துள்ளது.

பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடைய 932 பேரும், சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 4 பேரும் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி மினுவாங்கொடை, பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொத்தணியில் தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 70,030 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம், ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய 4 பேரும் நேற்று கொரோனா நோயாளர்களாகக் கண்டறியப்பட்டதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், 6,688 கொவிட் 19 நோயாளர்கள் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.