நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 74,000 ஐ கடந்துள்ளது.
நேற்றைய தினம் 940 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதையடுத்து இந்த எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.
இதற்கமைய இலங்கையில் கொவிட் 19 தொற்றுறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 74,056 ஆக உயர்வடைந்துள்ளது.
பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடைய 932 பேரும், சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 4 பேரும் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி மினுவாங்கொடை, பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொத்தணியில் தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 70,030 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம், ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய 4 பேரும் நேற்று கொரோனா நோயாளர்களாகக் கண்டறியப்பட்டதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், 6,688 கொவிட் 19 நோயாளர்கள் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.