சுகாதார விதிமுறைகளை மீறிய 3095 பேர் இதுவரையில் கைது

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு மாறாக செயற்பட்ட 3095 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளி பேணாமை தொடர்பிலே இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளில் பிரதானமாக கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளான, முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் போன்ற வழிமுறைகளை பின்பற்றாமை தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யபட்டுள்ளதாக பிரதி காவல்துறை மா அதிபர் அஜித்ரோஹண குறிப்பிட்டார்.

இதேவேளை, மேல்மாகாணத்தில் தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு சட்டவிதிகளை பின்பற்றாதஇ அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தொடர்பில் சுகாதார பிரிவினருடன் இணைந்து காவல்துறையினர் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் காவல்துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.