கொழும்பு – மத்திய அஞ்சல் பரிவர்த்தனையில் பணியாற்றும் 4 ஊழியர்களுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
அவர்களில் ஒருவர், மத்திய அஞ்சல் பரிவர்த்தனையில் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் நோயாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அவருடன் தொடர்பை பேணிய 26 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் எமது செய்திச் சேவை வினவியபோது, பதிலளித்த அஞ்சல்மா அதிபர் ரஞ்ஜித் ஆரியரத்ன, தொற்றுறுதியானவர்கள் சிகிச்சை மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.