இன்று இனந்தெரியாதவர்களால் கையடக்க தொலைபேசிகளுக்கு அனுப்பப்படும் குறுந்தகவல்களை நம்ப வேண்டாம்-அஜித் ரோஹாண

download 8 2
download 8 2

காதலர் தினமான இன்று இனந்தெரியாதவர்களால் கையடக்க தொலைபேசிகளுக்கு அனுப்பப்படும் குறுந்தகல்களை நம்ப வேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

காதலர் தினத்திற்காக பெறுமதியான பரிசுகள் வெல்லப்பட்டுள்ளதாகவும் அதனை பெற்றுக்கொள்ள ஒரு தொகை பணத்தை வைப்பிலிடுமாறும் அந்த குறுந்தகவல்களில் குறிப்பிடப்பட்டிருக்கலாம் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹாண தெரிவித்துள்ளார்.

எனினும் இதுபோன்ற குறுந்தகவல்கள் மோசடியாளர்களால் அனுப்பப்படலாம் எனவும் அதனை நம்பி பணத்தினை வைப்பிலிட வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.