எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச தெரிவு!!

sajith
sajith

சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

இந்நிலையில் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் சபாநாயகருக்கு கடிதம் அனுப்பிவைத்துள்ளார்.

இதன் மூலம் வரும் ஜனவரி 3ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் போது எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவை சபாநாயகர் நியமிப்பதுடன், அவருக்கு உரிய வரப்பிரதாசங்களையும் வழங்க அனுமதியளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.