வெள்ளவத்தை, வேலுவனராம பகுதியில் ஹெரோயின் மற்றும் ஒரு தொகை ரொக்கப் பணத்துடன் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் துபாயில் இருந்து செயற்பட்டு வரும் ‘அசங்க’ எனப்படும் போதைப்பொருள் வியாபாரியின் நெருங்கிய நண்பர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து 25 கிராம் ஹெரோயினும், 650,000 ரூபா பணமும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த நபர் படோவிட்ட பகுதியில் வசிப்பவர் ஆவர்.
இதற்கிடையில் கஹாதுடுவ பகுதியில் 222 கிராம் ஹெரோயினுடன் இரு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.