குழந்தைகளை பிச்சை எடுக்க விட்டு பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் கைது

kaithu

குழந்தைகளை பிச்சை எடுக்க விட்டு பாலியல் தொழிலில் ஈடுபட்ட இரண்டு பெண்களை அம்பலங்கொட காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு பெண்களும் 32 மற்றும் 26 வயதுடையவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் இருவரும் நான்கு குழந்தைகளின் தாய்மார்கள் என்பதுடன், குழந்தைகளை பிச்சை எடுக்க விட்டு அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டுவந்துள்ளனர்.

குறித்த இரு தாய்மார்களும் நான்கு சிறார்களும் பலபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பின்பு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.