வவுனியாவில் கஞ்சாவுடன் இருவர் கைது

kaithu

வவுனியாவில் கேரள கஞ்சாவை உடமையில் வைத்திருந்த இருவரை வவுனியா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நேற்றயதினம் இரவு வவுனியா இறம்பைக்குளம் மற்றும் ஆச்சிபுரம் பகுதிகளில் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் அடிப்படையில் ஒரு கிலோ 300 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த கஞ்சாவினை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இரண்டு நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.