கொழும்பு துறைமுகத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய திட்டம்

9a7b2350f5a014c58d0b933cb0a33b78 L 1
9a7b2350f5a014c58d0b933cb0a33b78 L 1

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்தி தொடர்பான முன்மொழிவுகள் குறித்து இன்று அமைச்சரவையில் கலந்துரையாடப்படவுள்ளது.

மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஆராய துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சின் செயலாளரின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் இந்தியா மற்றும் ஜப்பானிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள முன்மொழிவுகள் குறித்தும் இன்றைய அமைச்சரவையில் கவனம் செலுத்தப்படவுள்ளன.

கிழக்கு முனையத்தை இலங்கை அரசாங்கத்தின் கீழ் அபிவிருத்தி செய்வதற்கும் மேற்கு முனையத்தை வௌிநாட்டு முதலீட்டாளர்களுடன் இணைந்து அபிவிருத்தி செய்யவும் அரசாங்கம் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.