நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாரஹேன்பிட இராணுவ வைத்தியசாலையில் வைத்து கொவிட் தடுப்பூசி போடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று காலை ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
நாடளாவிய ரீதியில் உள்ள 5100 அதிகாரிகளுக்கு இவ்வாறு தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.