கடந்த 24 மணி நேரத்தில் வாகன விபத்துக்கள் காரணமாக 11 பேர் உயிரிழந்தனர். காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.
அவற்றில், நேற்று(15) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மாத்திரம் 9 மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இதற்கு முன்னர் இடம்பெற்ற இரண்டு வாகன விபத்துக்களில் காயமடைந்த நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு பேர் உயிரிழந்ததாகவும் காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டார்.