தெல்லிப்பளை கருகம்பனையை சேர்ந்த அமரர் திரு மூத்ததம்பி சதாசிவம் அவர்களின் 29ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரின் பேத்தி செல்வி.சாதனா சுரேஸ்குமார் அவர்களின் நிதியுதவியில் மாங்குளம் கிழவன் குளம் கிராமத்தின் “அலைமகள்” முன்பள்ளி மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் கடந்த திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் திருமதி வனிதா (முன்பள்ளி வலய இணைப்பாளர்) மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர்கழக சம்மேளன உபதலைவி செல்வி மே.நீவேதிகா முன்பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
இவ்வுதவியை ஒழுங்குபடுத்திய சுவிஸ் நாட்டில் வாழும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் கிளிநொச்சி ஏர் நிலம் அமைப்பினர் நன்றிகளை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது