ஒரு கிலோ கிராமுக்கும் அதிக ஹெரோயின் மற்றும் 3 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிக பணத்துடன் மாகொல பிரதேசத்தில் வைத்து இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை விசேட அதிரடிப் படை அதிகாரிகளினால் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து முச்சக்கரவண்டி ஒன்றும் காவல்துறை விசேட அதிரடி படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதற்கமைய கடந்த ஒரு வாரக்காலப்பகுதியில் சுமார் 15 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.