பேரணியில் பங்கேற்றமை குறித்து சாணக்கியனிடம் காவற்துறையினர் விசாரணை!

sanakiya
sanakiya

கடந்த பெப்ரவரி 3ஆம் திகதி ஆரம்பித்து ஐந்து நாட்கள் இடம்பெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நீதிக்கான எழுச்சிப் பேரணி குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இன்று(19) விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

மூதூர், காத்தான்குடி, கிளிநொச்சி, வாழைச்சேனை,மாங்குளம் மற்றும் சம்மாந்துறை ஆகிய காவல் நிலையங்களின் அதிகாரிகள் இவ்விசாரணையில் பங்கேற்றனர்.

இதில் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பங்கேற்றமை குறித்து வினவப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தமிழ், முஸ்லிம் மக்களின் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி இப்பேரணி பொத்துவில் முதல் பொலிகண்டி வரை இடம்பெற்றிருந்தது.