சிறைச்சாலைகளின் பதில் ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனிய சிறைச்சாலைகளின் நிரந்தர ஆணையாளர் நாயகமாக அமைச்சரவையால் இன்று(19) பிற்பகல் நியமிக்கப்பட்டார்
துஷார இலங்கையின் 21ஆவது சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக பதவியேற்றுள்ளார்.
நாட்டின் முதலாவது சிறைச்சாலை ஆணையாளர் நாயகமாக மேஜர் ஏ.டி.வில்டன் 1905ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.