கொழும்பு, கொழும்பை அண்டிய பகுதிகளில் இன்று நீர்வெட்டு

water cut fastnews
water cut fastnews

கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பகுதிகளில் இன்று காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 16 மணித்தியால நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு, தெஹிவளை, கல்கிஸை, கோட்டே மற்றும் கடுவலை ஆகிய மாநகர பகுதிகளிலும் மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவை நகர சபை பகுதிகளிலும் குறித்த நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

அத்துடன் கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபை பகுதிகளிலும் இரத்மலானை பகுதியிலும் நாளைய தினம் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.