நாட்டில் 79 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை

202009280529000009 In Maratha New to 18 thousand people Corona kills 380 people SECVPF 1
202009280529000009 In Maratha New to 18 thousand people Corona kills 380 people SECVPF 1

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 517 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 78 ஆயிரத்து 937 ஆக உயர்வடைந்துள்ளது.

பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடைய 506 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி மினுவாங்கொடை, பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொத்தணியில் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 74 ஆயிரத்து 877 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 11 பேருக்கும் நேற்றைய தினம் தொற்று உறுதியானதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், 5, ஆயிரத்த 938 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 743 பேர் குணமடைந்து நேற்று வீடுகளுக்க திரும்பியுள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 72 ஆயிரத்து 566 ஆக அதிகரித்துள்ளது.