இலங்கையில் நேற்று(19) ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கொவிஷீல்ட் தடுப்பூசி 30,307 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது வரை மொத்தம் 263,779 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையின் தடுப்பூசி இயக்கம் கடந்த ஜனவரி 29 ஆம் திகதி தொடங்கியது. முன்னணி சுகாதார ஊழியர்கள், இராணுவ வீரர்கள் முதலில் தடுப்பூசியைப் பெற்றிருந்தனர்.
இதே வேளை மேல் மாகாணத்தைச் சேர்ந்த மொத்தம் 3,145 சிறைச்சாலை அதிகாரிகள் கடந்த நான்கு நாட்களில் முதலாவது கொவிட் -19 தடுப்பூசியைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.