இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ பயணித்த ஜீப் ரக வாகனம் இன்று காலையில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
சிலாபம் – ஆனமடுவ வீதியிலுள்ள பள்ளம – சேருகல பிரதேசத்தில் வீதியை விட்டு விலகிய வாகனம், மரமொன்றில் மோதியதாலேயே விபத்து சம்பவித்துள்ளது.
இவ்விபத்தில், சாரதி உட்பட மூவர் காயமடைந்துள்ள நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சருக்கு எதுவித பாதிப்புமில்லையெனவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.