கட்டுநாயக்க விமான நிலையத்தில் இதுவரை 1,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி!

COVID CORONA VACCINE 768x384 1
COVID CORONA VACCINE 768x384 1

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட சுமார் 1,500 பேருக்கு இதுவரை கொவிட் -19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி விமான நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள இலங்கை இரா ணுவத்தினர், விமானப்படை, பொலிஸார், குற்றப் புலனாய்வுத்துறை, குடிவரவு மற்றும் குடியகல்வு துறையினர், சுங்கப் பிரிவினர், துப்புர வாளர்கள், ஊழியர்கள் மற்றும் வர்த்தக சந்தையில் உள்ளவர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.