ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி கட்சி கத்தோலிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும் இடையிலான சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது.
பேராயர் உத்தியோகபூர்வ இல்லம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
பேராயரின் ஆலோசனைக்கு அமைய இந்த சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள சில பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அடுத்த மாதம் 2 ஆம் திகதி இந்த சந்திப்பை நடத்துவதற்கு இதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.