கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 79, 999 ஆக அதிகரித்துள்ளது!

coronavirus.positive.1 768x384 1
coronavirus.positive.1 768x384 1

நாட்டில் நேற்றைய தினம் மேலும் 519 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய 495 பேருக்கும் சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 23 பேருக்கும் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கொவிட்-19 தொற்றிலிருந்து 843 பேர் நேற்று குணமடைந்தனர்

இந்த நிலையில் நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 79, 999 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் தொற்றிலிருந்து 74, 299 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தநிலையில் தொற்றுறுதியான 5,255 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.