அரசியல் கைதிகள் விடுதலை உண்மைக்கு புறம்பானவை

komakan
komakan

தமிழ் அரசியல் கைதிகள் சிலர் ஜனாதிபதி கோட்டாபயவின் சிபார்சில் அனுராதபுரம் சிறையிலிருந்து அரசியல் கைதிகள் 7பேர் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்ற செய்திகளை அரசியல் கைதிகளின் குடும்பங்கள் மறுத்துள்ளது.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அரசியல் கைதிகளது குடும்பங்களின் சார்பில் முன்னாள் அரசியல் கைதியான கோமகன் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் சிறையில் ஆறு அரசியல் கைதிகளே உள்ள நிலையில் அரசியல் கைதிகள் 7பேர் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்ற செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை.

இதேவேளை இப்போது சிறைகளில் 89 தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 36 பேர் தண்டனை பெற்ற கைதிகளாகவும், 35 பேர் சந்தேகக் கைதிகளாகவும் மற்றும் 15 பேர் மேன் முறையீடு செய்த கைதிகளாகவும் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் நல்லாட்சி அரசாங்கத்தில் அரசில் அரசியல் கைதிகள் எவரும் விசேடமாக விடுவிக்கப்படவில்லை எனவும் அவ்வாறு விடுதலையானவர்கள் நீதிமன்றில் வழக்காடியே வந்தனர் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோத்தாபயவின் தேர்தல் பரப்புரைகளின் போது கொடுத்திருந்த வாக்குறுதிக்கமைய அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கோமகன் தெரிவித்துள்ளார்.