அதிக விலையில் நெல்லை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி

download 8 4
download 8 4

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கான பெரும்போக நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, விவசாயிகளுக்கு அதிகபட்ச விலை கிடைக்கும் வகையில் நெல்லை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இவ்வாறு அதிகபட்ச விலையில் நெல் கொள்வனவு செய்யப்படுமானால் எதிர்வரும் காலங்களில் நாட்டரிசியின் விலையினை 98 ரூபாவிற்கு எந்தவிதமான மாற்றமும் இன்றி பேண முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.