கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியிலுள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் இன்று 5 நிலையங்களில் முன்னெடுக்கப்பட்டன.
இதற்கமைய இன்றைய தினம் 4,500 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் நேற்றைய தினம் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் 7,400 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.