விவசாயிகளுக்கு இழப்பீடு

vithuru vikramanayaga
vithuru vikramanayaga

தற்பொழுது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையின் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாதிப்புக்களை மதிப்பீடு செய்து இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று விவசாய இராஜாங்க அமைச்சர் விதுரு விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலையினால் கிழக்கு மாகாணத்தில் விவசாயத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.