சஜித் பிரேமதாசவிற்கு எதிர்க்கட்சித் தலைவராவதற்கான சந்தர்ப்பத்தினை வழங்கிய ரணில் விக்ரமசிங்க அவர்கள் ஐ.தே.க இன் தலைவராக சஜித் பிரேமதாச செயற்படுவதற்கு வழிவிட வேண்டுமென தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், முன்னாள் அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தலவாக்கலை பிரதேசத்தில் செய்தியாளர்களிடம் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்;
ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்கால நலன் கருதி கட்சியை வழிநடத்திச் செல்வதற்கான வாய்ப்பினை சஜித்திற்கு வழங்க வேண்டும்.
கடந்த 25 வருட காலங்கள் ரணில் விக்கிரமசிங்க இந்த கட்சியை வழிநடத்தி வந்திருந்தாலும் கட்சி தொடர்பில் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை மேற்கொள்ள முடியவில்லை.
ஐக்கிய தேசிய கட்சி ஒவ்வொரு தேர்தல்களிலும் பின்னடைவை சந்தித்துள்ளதனை அவதானிக்க முடிந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.