யாழ் நெடுந்தூர போக்குவரத்தில் இறுக்கமான நடைமுறை பின்பற்றப்படும் – மணிவண்ணன்

VideoCapture 20210226 120412
VideoCapture 20210226 120412

யாழ்ப்பாண நகர பகுதில் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நெடுந்தூர  போக்குவரத்தில் இறுக்கமான நடைமுறை பின்பற்றப்படும் என யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

குதித்த விடையம் தொடர்பில் நேற்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வி.மணிவண்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வெளிமாவட்டங்களில் இருந்து வந்து செல்லும் பேருந்துகள் யாழ்ப்பாணம் வைத்திய சாலை வீதியால் உள் நுழைவது மற்றும் வெளிச் செல்வது மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள வி.மணிவண்ணன் நடைமுறைகளை மீறுவோர் மீது காவல்துறையினர் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என மேலும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயனிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நெடுந்தூர  பேருந்து நிலையத்திற்கு வருகை தந்து தமது பயனங்களை மேற்கொளுமாறும் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.