காணாமல் போனவர்களின் குடும்பங்களை சந்திக்கவுள்ள கோட்டாபய ராஜபக்‌ஷ

Sagara 4296 1068x712 1 1 1
Sagara 4296 1068x712 1 1 1

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் போனவர்களின் குடும்பங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ விரைவில் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியுறவு செயலாளர் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகேவை மேற்கோள் காட்டி இந்திய ஊடகமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

அத்துடன், காணாமல் போனவர்களின் பிரச்சினையை முடிவிற்கு கொண்டுவருவதற்கும் அவர்களது குடும்பங்களுக்குத் ஒரு தீர்வை முன்வைப்பதற்கும் ஜனாதிபதி உண்மையிலே உறுதியாக இருப்பதாகவும் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் குடும்பங்கள், பெரும்பாலும் பெண்கள் வீதியோரங்களில் இடைவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், காணாமல் போனவர்களின் குடும்பங்களின் குறைகளை அடையாளம் காணவும், அவர்களுக்கான தீர்வை பெற்றுக்கொடுக்கவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ விரும்புவதாக வெளியுறவு செயலாளர் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே குறிப்பிட்டுள்ளார்.