சட்டக்கல்லூரி மாணவன் தாக்கப்பட்டமை தொடர்பில் விசேட விசாரணை- பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண!

66 2
66 2

பேலியகொட காவல்துறையினரால் சட்டக்கல்லூரி மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேல் மாகாணத்தின் வட பிரிவுக்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் தலைமையில் விசேட விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,

குறித்த மாணவன் றாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறை உத்தியோகத்தர்களின் பணி இடைநிறுத்தம் செய்யுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர காவல்துறை மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

இது தொடர்பில் கவனம் செலுத்திய காவல்துறை மா அதிபர், மேல் மாகாணத்தின் வடக்கு பிரிவுக்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபரின் கீழ் காவல்துறை விசேட விசாரணை பிரிவை விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், காவல்துறை பரிசோதகர் ஒருவரும் 3 காவல்துறை கான்ஸ்டபிள்களும் இவ்வாறு பணி நீக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.