மலையக மக்கள் முன்னணியின் மறுசீரமைப்பும், பதவியேற்பு விழாவும் தலவாக்கலை – கதிரேசன் மண்டபத்தில், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியரும், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமுமான பேராசிரியர் சங்கரன் விஜேசந்திரன் மேற்கொண்டிருந்தார்.
இந்நிகழ்வில் கட்சியின் பிரதித் தலைவர், லோறன்ஸ், தேசிய அமைப்பாளர் இராஜாராம், மலையக தொழிலாளர் முன்னணியின் செயலாளர் சுப்பிரமணியம், நிதி செயலாளர் விஷ்வநாதன் புஷ்பா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
அனுஷா சந்திரசேகரன் வகித்த கட்சியின் பிரதி செயலாளர் நாயகம் பதவிக்கு, சிவசாமி பத்மநாதன் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த விழாவில் மலையக மக்கள் முன்னணியின் 80 உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ஏற்றுக்கொண்டனர்.